மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் மாட்டுடன் மோதி மோட்டார்சைக்கிள் விபத்து.!

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (12.11.2025) காலை 9.40 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு  கல்முனை சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி  பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒன்று செட்டிபாளையம் முருகன் ஆலத்திற்கு முன்பாக பயணிக்கும் போது வீதியை கடந்து கொண்டிருந்த மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தின் போது மாடு படுகாயமடைந்து உயிருக்கு போராடி வரும் நிலையில் விபத்தில் சிக்கிய இளைஞரும் காயமடைந்துள்ளார்.

முன்னால் சென்றுகொண்டிருந்த காரை முந்துவதற்கு முயற்சித்த சமயமே மோட்டார்சைக்கிள் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை