மடக்களப்பு செங்கலடியில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு.!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த "ஏர் முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு" நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு,  செங்கலடி வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

 சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விழா அமைந்திருந்தது.

அமைப்பின் தலைவர் க. கயிலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
 அத்துடன், அவர்களால் உருவாக்கப்பட்ட கைத்தொழில் தயாரிப்புகளின் கண்காட்சியும் இடம்பெற்றது. 

உடல் ரீதியான சவால்களைத் தாண்டி, அவர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் அவர்களின் தன்னம்பிக்கையை பறைசாற்றுவதாக அமைந்தன.

நிகழ்வின் முக்கிய அங்கமாக, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர், 
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான சிறந்த மாணவர்கள்.

வெற்றிகரமான கைத்தொழில் முயற்சியாளர்கள்.
கலை நிகழ்ச்சிகளில் சிறப்பித்த கலைஞர்கள்.
மேலும், ஏர் முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி நன்றி தெரிவிக்கப்பட்டது.

கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்
இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. K. தனபாலசுந்தரம், உதவி பிரதேச செயலாளர் திருமதி. திலக்சினி சசிதரன், பிரதேச சபை தவிசாளர் திரு. M. முரளிதரன்.

 மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. S. அருள்மொழி, திருமதி. கோணேஸ்வரன் சந்திரகலா மற்றும் பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்கள்.

 சிரேஸ்ட ஊடகவியலாளரும் செங்கலடி பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன், சமூக செயற்பாட்டாளர் சர்மிளா உதயகுமார், மோகனராஜன், குமாரசிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதியது பழையவை