மொனராகலை, உனவட்டுன பகுதியில் இன்று (15.04.2026)அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத் தலைவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
அம்பாறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்பு நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.
வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியின் உனவட்டுன பகுதியில் இன்று அதிகாலை பயணித்துக் கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டி எதிரே வந்த KDH ரக வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற, அம்பாறையைச் சேர்ந்த நிஷாந்த தேவப்பிரிய பண்டாரா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உடனடியாக மீட்கப்பட்டு புத்தல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.