மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் இன்று (30.05.2026) காலை திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, துரிதமாக செயற்பட்டு தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இத்தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சொத்துச் சேத விபரங்கள் மற்றும் விபத்துக்கான பிரதான காரணம் என்பன இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள்.
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.