மொனராகலை சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31 ஆம் சந்திப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மதகு ஒன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று(29.05.2026) மதியம் மொனராகலையிலிருந்து கொட்டியாகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 11 பெண்களும், 16 ஆண்களும் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களுள் 5 மாதக் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகவே பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.