எந்த விமர்சனம் வந்தாலும் - கோட்டாபய விடுத்துள்ள சூளுரை



எவர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தபோதிலும், தனது நடைமுறையின் கீழ் மாத்திரமே கடமையாற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தின் தெரணியாகல – திக்வெல்ல பகுதியில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் பிரதேசசபை தேர்தல் ஒன்றில் கூட போட்டியிடாமலேயே ஜனாதிபதியாகியுள்ளேன். மக்களின் கோரிக்கைக்கு அமையவே தெரிவாகியுள்ளேன்.பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் என்னால் முன்னெடுக்கப்பட்ட பணிகளை பார்த்து மக்கள் என்னை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.

கிராமங்களுக்கு செல்வது ஏன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதிகாரிகளிடம் கேட்க முடியும் அல்லவா என கேள்வி எழுப்புகின்றனர். அவ்வாறும் முடியும். எனினும், என்னுடைய நடைமுறை அது கிடையாது. யார் என்னை விமர்சித்தாலும், நான் எனது நடைமுறையின் கீழ் மாத்திரமே பணியாற்றுவேன்” என ஜனாதிபதி கூறியுள்ளார்.
புதியது பழையவை