வாழைச்சேனை மீனவர்கள் மீது ஆழ்கடலில் இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல்!



எச்.எம்.எம்.பர்ஸான்)ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று (10) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூவர் மீது கடலில் வந்த நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாம் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இயந்திரப் படகு ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினர் தங்கள் மூவரையும் தாக்கி எங்களது படகில் இருந்த ஜீ.பீ.எஸ்.கருவியையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று மீனவர்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை