அம்பாறையில் உணரப்பட்ட நிலநடுக்கம்!



அம்பாறை- பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.44 மணியளவில் உணரப்பட்டுள்ளது.


பொத்துவில் - சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம் மற்றும் களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


இதேவேளை நிலநடுக்கத்தினை எம்மாலும் உணரக்கூடியதாக இருந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை