ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்




அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று (28) முன்னால் தலைவர் எம். சஹாப்தீன் தலைமையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது மரணித்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான றசீட் எம்.ஹபீல், சிவப்பிரகாசம் ஐயா மற்றும் பன்னூலாசியரான எம்.எம்.எம்.நூறுல் ஹக் ஆகியோருக்கான
நினைவுரைகளை முதல் அமர்வில் போரத்தின் முன்னால் தவிசாளரும் தற்போதய தலைவருமான எம். ஏ. பகுர்தீன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியாளருமான அஸ்லம் எஸ். மௌலானா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இரண்டாம் அமர்வில் 2021/ 2022 ஆகிய நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பி. முஹாஜிரின் தலைமையில் இடம்பெற்ற தெரிவின் போது பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தவிசாளராக எம். சஹாப்தீன், தலைவராக எம்.ஏ. பகுர்தீன்,
செயலாளராக எம்.எஸ்.எம். ஹனீபா, பொருளாளராக எம்.எஸ்.எம். அப்துல் மலீக் அமைப்பாளராக யூ.எல்.எம்.றியாஸ், பிரதித் தலைவராக ஏ.எல்.ஏ. நிப்றாஸ் உப தலைவராக வி.சுகிர்தகுமார், உப செயலாளராக யூ.கே. காலித்தீன், கணக்காய்வாளராக ஏ.எல். றியாஸ் ஆகியோரும் முகாமைத்துவ சபை உறுப்பினர்களாக எம்.எப். நவாஸ் எம்.ஐ.எம். வலீத் எல். கஜன் என்.எம்.எம். புவாட் கே.எல். அமீர் பி. முஹாஜிரின்ஏ.எல்.எம். சியாத் ஐ. உசைதீன் அஸ்லம் எஸ். மௌலானா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்
புதியது பழையவை