கத்தியால் குத்தி கொள்ளையடித்த துணிச்சல் மிக்க பெண்




கட்டுநாயக்கவில் உள்ள பிரபல பாபர் நிலையம் ஒன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் உரிமையாளரை கத்தியால் குத்தியதுடன், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் கொள்ளையடித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


வட்டரெக்க பானலுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தமாலி பிரியங்கிக்கா என்ற 34 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணுடன் வந்த இன்னொருவரை பொதுமக்கள் தாக்கியமையினால் வாக்குமூலம் வழங்க முடியாத ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை