அவதானி
கிழக்கு மாகாண சபையின் முதல்வர் வேட்பாளராககளமிறங்க வேண்டுமென சிவஞானம் சிறீதரன் எம் பிசாணக்கியனைக் கேட்டுக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்துக்கு முதன் முதல் தெரிவாகும் தமதுஉறுப்பினர்களுக்கு கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நேரத்தில்குறிப்பிட்ட நேரம் வழங்குவது மரபு. ஆனால் அந்தத்தார்மீகக் கடமையைச் செய்யவில்லை. அப்படியிருந்தும்சுழித்துக்கொண்டோடிய சாணக்கியன் இந்த வலையில்வீழ்ந்து விடுவாரென நாம் நம்பவில்லை.
இன்று கிழக்கில் மட்டுமல்ல நாடு முழுவதிலுமுள்ள தமிழ்இளைஞர்கள் மத்தியில் ஹீரோ சாணக்கியன்தான். பலஅரசியல் வாதிகள், ஊடகவியலாளர்களுக்கு வயிற்றில்புளியைக் கரைக்கும் விடயம் இது. ஒவ்வொருவரும்ஒவ்வொரு விதமாக வாந்தியெடுக்கிறார்கள். உண்மையில்கட்சியின் நலன், எதிர்காலத்தில் வெற்றிப்பாதைக்குஅழைத்துச் செல்லவேண்டிய தேவை,இவையெல்லாவற்றையும் விட இனத்தின் நன்மையைகருதுபவராக இருந்தால் சிறீதரன் கட்சியின் செயலாளராகவரவேண்டும் என்றுதான் சாணக்கியனுக்குசொல்லியிருப்பார்.
முதன் முதல் எம்பியாக வந்த ஒருவரை தடுப்பிலிருந்து வந்தஒரு முன்னாள் போராளி சந்தித்தார். அவரிடம் "சம்பந்தன்ஐயா போல ஆட்கள் இப்படியே தொடர்ந்துஇழுபட்டுக்கொண்டிருக்காமல் அடுத்தவர்களுக்கு வழிவிடவேண்டும். இப்ப நான் எம் பி யாக இருக்கிறன். இன்னும் ஒருதரம் எம் .பி யானதுக்கு பிறகு தேர்தலில் போட்டியிடமாட்டன். அடுத்தவர்கள் வர வழிவிடுவேன்" என்றார்.இதனைக் கேட்ட அந்தப் போராளிபுன்னகைத்துக்கொண்டார். ஒரு உரையாடலின் போது"பதவியை விடத் தயார்;தயார் என்று சொல்லிக்கொண்டேஇருக்கவேண்டுமே யொழிய ஒரு நாளும் அதைவிடக்கூடாது" என்று திரு.அமிர்தலிங்கம் தனக்குஅறிவுறுத்தியதாக குறிப்பிட்டார் வே.பிரபாகரன். ஏதோதெரியவில்லை அந்த நேரம் பார்த்து இந்த விடயம்நினைவுக்கு வந்தது . இன்று கிழக்கில் கட்சியை யாரிடம்ஒப்படைத்திருக்கிறார் மாவை ? ஒரு கட்சியின் தலைமைவேட்பாளராகப் போட்டியிட்டு விருப்பு வாக்கில் இறுதிஇடத்தைப் பெற்றுக்கொண்ட பொன். செல்வராஜாவிடம்2013ல் தனது பாட்டனார் சி.மு இராசமாணிக்கத்தின்பெயரால் ஆரம்பிக்கப்பட விருந்த நிதியத்தின் நிகழ்வுக்குசம்பந்தன் ஐயாவை அழைத்திருந்தார் சாணக்கியன். சம்பந்தன் ஐயாவின் வருகை செல்வராஜாவுக்கு வயிற்றில்புளியைக் கரைத்தது. தொலைபேசியில்சாணக்கியனைஅழைத்து 2020 வரை அரசியலுக்கு வரும்எண்ணம் வரக்கூடாது என எச்சரித்தார்.இது சம்பந்தமாகமாவையை நேரில் சந்தித்துக் கூறினார்சாணக்கியன்.எப்போது தான் மாவை தனது ஆளுமையைநிரூபித்து காட்டியுள்ளார் ? வளவளா பதில்தான்.
இக் கால காலகட்டத்தில் தான்அருண் தம்பிமுத்துதன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு சாணக்கியனைஅழைத்தார். அவரும் அந்த அழைப்பைஏற்றுக்கொண்டார்..அரசியலில் களமிறங்கினார்..அவ்வருடம்நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வில் சாணக்கியன் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 24.இது நாள் வரைதமிழரின் விடுதலைப்போராட்டம் அரச பயங்கர வாதத்தின்விளைவுகள் பற்றியெல்லாம் எதுவுமே அவருக்குத் தெரியாது. துயிலுமில்லத்தில் கண்ட அபூர்வமான காட்சிகள் அவரைஉலுப்பின. அந்த வித்தியாசமான உணர்வலைகள் பற்றிகனவிலும் அவர் அறிந்ததில்லை. தான் எங்கேநிற்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார். அருண்தம்பிமுத்துவின் கட்சியிலிருந்து விலகினார்.அவரைப்பொறுத்தவரை அது ஒரு அரசியல் விபத்து. இத் தவறைஒப்புக்கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்தது.
தந்தை செல்வாவுடன் பழகிய கிழக்கு மாகாணத் தமிழ்இளைஞர் பேரவைக் காரரும் பின்னாளில் ஆயுதப்போராட்டத்தில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் வரைபயணித்தவருமான பாசி அல்லது யோகன் பாதர் எனப்படும்பாலிப்போடி சின்னத்துரையை தனது இல்லத்துக்குவரவழைத்து கலந்துரையாடினார் சம்பந்தன் ஐயா. உடனேமாவையும் இன்னுமொரு முக்கிய புள்ளியும் புலிகள்அரசியலுக்குள் கொண்டு வரப்பட வேண்டியவர்கள் அல்ல ; அவர்களை வைக்கவேண்டிய இடத்தில்தான்வைக்கவேண்டும் எனத் தமது பலத்த ஆட்சேபனையை த்தெரிவித்தனர்.(ஆனால் மாவீரர் குடும்பத்தினர், முன்னாள்போராளிகளின் வாக்குகள் மட்டும் வேண்டும்) தமிழ்இளைஞர் அரசியலில் தன்னை விட யாருக்கும் வரலாறுஇருக்கக் கூடாது என்பது மாவையின் நிலைப்பாடு. எப்படிஅவர் பாலிப்போடி சின்னத்துரையை ஏற்றுக்கொள்வார்? புதிய சுதந்திரனும் மாவையையே சுற்றிச் சுற்றி வரலாறுஎழுதியது.
இந் நிலையில் யோகன் பாதரும் சாணக்கியனும் சந்தித்துக்கொண்டனர். சாணக்கியனுக்கு முழுமையான ஆதரவளிக்கமுடிவெடுத்தார் யோகன் பாதர். சாணக்கியனுக்கு வேட்பாளர்நியமனம் வழங்கியமை தொடர்பாக பொன்.செல்வராஜாஅதிருப்தி வெளியிட்டார். அருண் தம்பிமுத்துவுடன்சிலகாலம் இணைந்து செயற்பட்டவர்என்றுகுற்றஞ்சாட்டினார்.இதற்கு நீங்கள் எல்லாம் முன்புஎங்கேயிருந்தீர்கள்? என்று கேட்கப்பட்டதும் பதில் சொல்லமுடியவில்லை பொன்.செல்வராஜாவினால் .
(1977 தேர்தலில் கணேசலிங்கம் போட்டியிட்போதேசெல்வராஜாவின் உடலில் தேசியக் காற்றுப்பட்டது. கணேசலிங்கம் வெற்றி பெற்ற பின் அவரது கோவைதூக்குபவராகத் திரிந்தார். அதற்கு முன் இவர் தம்பிராஜாவின்ஆதரவாளர். 1970 தேர்தலில் ஐ.தே. கட்சியில் போட்டியிட்டுபின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியவர் தம்பிராஜா ) இந் நிலையில் சாணக்கியன் சிங்களத்தியின் மகன் என்றகதையை தமிழரசுக் கட்சியினரே அவிழ்த்து விட்டனர். எல்லோருடைய சதியையும் தாண்டி 33332 விருப்புவாக்குகளை பெற்றார் சாணக்கியன். அரசுத் தரப்பில்பிள்ளையானை,வியாழேந்திரனை வெல்ல வைப்பதற்காகசாத்தியமான சகல விடயங்களும் மேற்கொள்ளப்பட்டன. தேர்தலின் பின்னர் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுக் குழப்பங்களையடுத்து செயலர் ராஜினாமாசெய்யவேண்டியேற்பட்டது. இந் நிலையில் புதியசெயலாளராக
கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரான பாலிப்போடிசின்னத்துரையை தெரிவு செய்வதே நல்லது என மாவைக்குத்தெரியப்படுத்தப்பட்டது. பிள்ளையான்,கருணாவைஎதிர்கொள்வதற்கு சின்னத்துரையே பொருத்தமானவர் எனச்சுட்டிக்காட்டப்பட்டது. அப்போதுசின்னப்பிள்ளைத்தனமாக மாவை ஒரு கேள்வி கேட்டார். "அது சரி இவர்கள் போன்றோரெல்லாம் இருக்கும் போதுபிள்ளையான் எப்படி இவ்வளவு வாக்குகள்( 54108) பெற்றார்" என்று. முதலில் தனது நிலையை அவர் உணரவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ள தான்இருக்கத்தக்கதாக அங்கஜன் எப்படி 36895 வாக்குகளைபெற்றார் என்று யோசித்திருந்தால் இவ்வாறானகேள்வியெழுந்திருக்காது. உண்மையில் புலிகளைமட்டுமல்ல புலிகள் சார்பானோரும் நிர்வாகப் பதவியில்அமர்வதை அவரால் சகிக்க முடியாது. மக்கள் பிரதிநிதியாகஇவர் தெரிவாகும் முன்னரே 1970 களில் யாழ். மாநகரஉறுப்பினராக விளங்கியவர் சொலமன் சூ சிறில். (இராஜாவிஸ்வநாதன் மேயராக இருக்கும்போதே).
இன்றுள்ள மாநகர சபை உறுப்பினர்களில் இவரே சீனியர்.இரு முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆர்னோல்ட்டை மேயர் வேட்பாளராக அறிவித்தால்எதிர்த்தே வாக்களிப்போம் என்று EPDP தெளிவாக அறிவித்துவிட்டது. எண்ணத் தெரியாத ஒருவரா தமிழரசுக் கட்சித்தலைவர் ? இல்லை நன்றாகவே தெரியும். எனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு சகுனப் பிழை ஏற்படவேண்டும் என்று எண்ணித்தான் சொலமன் சூ சிறிலை மேயர்வேட்பாளராக அறிவிக்காமல் விட்டார். எப்படியோ புலிகள்சர்பானோரை மேயர் பதவியில் அமர விடாமல் செய்தாயிற்றுஎன்று பூரணமனத் திருத்தியுடன் அன்று தூக்கத்துக்குச்சென்றிருப்பார். மணிவண்ணனை மேயராக்கும் எண்ணம்அவருக்கு இருந்திருக்காது என்றும் சொல்ல முடியாது.இந்நிலையில் தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிக்காரரான பாலிப்போடி சின்னத்துரையை செயலாளராக்கஎப்படி சம்மதிப்பார் மாவை ?
இந் நிலையில் கட்சியை இளைஞர் மத்தியில்கொண்டுசெல்லவும், மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபாதைக்கு வழிவகுக்கவும் சுயநலமின்றிச் சிந்திப்பவராகஇருந்தால் சாணக்கியனைக் கட்சி செயலாளராக்கவேண்டும் என்று அடுத்த செயற் குழுக் கூட்டத் திலோபொதுச் சபையிலோ வலியுறுத்த முனைவாரா சிறீதரன் ? பாலிப்போடி சின்னத்துரையைத்தான் மாவையால் நிராகரிக்கமுடியுமே தவிர சாணக்கியன் விடயத்தில் அவரால் எதுவும்கூறமுடியாது. தார்மீக ரீதியில் செயலர் பதவிமட்டக்களப்புக்குத்தான். இதனை கட்சித் துணைத்தலைவரான சி. வி.கே சிவஞானம் ஏற்கெனவேஅறிவித்துள்ளார்.
கட்சிச் செயலர் பதவியில் இன்னொருவரும் கண்வைத்துள்ளார்."பயங்கரவாதத்தை அழித்த இந்தஅரசாங்கத்துக்கு விசர் நாய்களைக் கொல்வது என்பதுகஸ்ரமான செயலல்ல "யூன் மாதம் 9ம் திகதி 2011 ஆண்டுமட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம்அரியநேத்திரன் ஆற்றிய உரை இது. நாடாளுமன்றஉரைகளைத் தொகுத்து வெளியிடும் அரசின் ஹன்சாட்டில்பக்கம் 1336 இல் இவ் விடயம் காணப்படுகிறது.விலங்குகள்நலச் சட்டம் மீதான விவாதத்திலேயே இவ்வாறு அவர்குறிப்பிட்டார். தேசிய விடுதலைப் போராட்டத்தைபயங்கரவாதம் என்று கூறுவதை வெளிப்படையாகஇல்லாவிட்டாலும் உள்ளுக்குள் ரசிக்கலாம் மாவை. இதுஅரியநேந்திரனுக்கான சிறப்புத் தகுதியெனவும்கருதலாம்.ஆனால் இதனை சிறீதரன் ஏற்க மாட்டார் என்றேநாம் நம்புகின்றோம்.
இதே வேளை கட்சிரீதியாக துணிச்சலுடன் செயலாற்றும்தகுதி சாணக்கியனுக்கு உண்டுதான். ஆனால் தமிழ் தேசியவிடுதலைப் போராட்ட வரலாறு அவருக்கு எதுவுமேதெரியாது. தலைவர் போராட்டத்தை ஆரம்பிக்கும் போதுஅவருடன் கூட இருந்த சிலர் இன்றும் பார்வையாளர்களாகஅவதானித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் . போராட்டம்ஆரம்பித்த காலத்தில் சாணக்கியன் பிறந்திருக்க வில்லைஇத்தனை வருடத்தில் சந்தித்த வேதனைகள், வலிகள்அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இந்தியா தமிழ்ப்போராளிகளுக்கு பயிற்சியும் ,ஆயுதமும் புகலிடமும்வழங்கியது. பின்னர் ஸ்ரீலங்கா சார்பில் தமிழர் மீது போர்தொடுத்தது இந்தியாவை இந்த மண்ணிலிருந்து விரட்ட என்னென்ன செய்யவேண்டுமோ அதனைப் புலிகள்செய்தனர். எனவேவரலாறு எந்தக் கட்டத்திலும் எப்படியும்மாறலாம்; இதற்கு ஆண்டுக்கணக்கில்லை என்றவிடயங்களை ஸ்ரீதரனும் யோகன் பாதரும் சாணக்கியனுக்குவிளக்க வேண்டும் . முற்கற்பிதங்கள் தேவையில்லை
எனவே கட்சிச் செயலாளராக சாணக்கியனைநியமிக்கவேண்டும் என ஏனையவர்களை வலியுறுத்தும்பணியை அவர் விரைந்து மேற் கொள்ளவேண்டும். முதல்வர்வேட்பாளர்கள் யார் என்ற சர்சைகளை நிறுத்துமாறுசம்பந்தன் ஐயாவும் சொல்லிவிட்டார். எனவே கட்சியின்நலன் கருதி சாணக்கியனை செயலாளராக்க முனைவார்சிறீதரன் என நம்புகிறோம் .