மாகாணசபைத் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு





தற்போது நிலவும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துமுவது குறித்து பல்வேறுபட்ட விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இவ்வறிவித்தல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமைப்படி எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை