ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ்வுக்கும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் (பிள்ளையான்) இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (12) இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு கூடுதல் நிதி உதவிகள் வழங்குவதற்கு ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார்.
விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி, மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள், எதிர்கால மாகாண சபை தேர்தல் போன்ற பல முக்கியமான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது விரைவில் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கூடுதலான நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் வாக்குறுதி அளித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.
