கொரோனா தொற்றினால் மேலுமொரு மரணம் இன்று (3) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 484 ஆக உயர்ந்துள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான பெண் ஒருவரே இன்று (03) உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார்.
குருதி விஷமடைவு மற்றும் கொவிட்-19 நிமோனியா காரணமாக மரணம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.