சித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நாளை (10) முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. சித்திரை புத்தாண்டு பண்டிகையின் பின்னர், எதிர்வரும் 19ம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
புத்தாண்டியின் பின்னரான காலத்தில், கடும் சுகாதார நடைமுறைகளின் கீழ் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவர்களை குழுக்களாக பாடசாலைகளுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது
