புகையிரதம் மோதி 16 மாடுகள் பலி



வவுனியா ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை கடுகதி புகையிரம் மோதியதில் அனைத்து மாடுகள் பலியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியது. இதன் காரணமாக பல இலட்சம் பெறுமதியாக 16 எருமை மாடுகள் குறித்த இடத்திலேயே பலியாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மேச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் அவை வீதியோரங்கள் புகையிரத வீதிகளுக்கு அருகிலேயே இரை தேடி வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த புகையிரதமே திருநாவல்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை