மலர்ந்திருக்கின்ற “பிலவ” எனும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு – களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆயலத்தில் விஷேட பூஜை வழிபாடும், உள் வீதி திருவிழாவும் இன்று (14) காலை இடம்பெற்றது.
மூல மூர்த்தியாகிய சுயம்புலிங்கப் பிள்ளையாருக்கு பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன. தொடர்ந்து பிள்ளையார், முருகன் வள்ளி சமேதராய், சிவன் பார்வதி சமேதராய் ஆலயத்தின் உள்வீதி வலம் வந்து உள்வீதி திருவிழா நடைபெற்றது.
இதன்போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுடிருந்தனர். இறுதியில் ஆலய கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆலய பிரதம குரு கைவிஷேஸடம் வழங்கப்பட்டது. கிரியைகள் அனைத்தும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் நடைபெற்றது.