ஆசிரிய மாணவர்களுக்கு கோவிட் தொற்று - இரு வகுப்பறைகளுக்கு பூட்டு


 
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நான்கு மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதியானதையடுத்து கலாசாலையின் இரு வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரிய கலாசாலையில் 100 ஆசிரிய மாணவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 4 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த மாணவர்களுடன் கல்வி பயிலும் ஏனைய 80 ஆசிரிய மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டை முனை பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.

சுமார் ஆறு மாதங்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமையே கற்றல் நடவடிக்கைகளுக்காக  குறித்த அரசினர் ஆசிரியர் கலாசாலை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை