மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நான்கு மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதியானதையடுத்து கலாசாலையின் இரு வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரிய கலாசாலையில் 100 ஆசிரிய மாணவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 4 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த மாணவர்களுடன் கல்வி பயிலும் ஏனைய 80 ஆசிரிய மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டை முனை பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.