நாட்டில் எதிர்வரும் 2 வாரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் தனியார் பிரிவினரின் நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் விருந்துபசாரங்கள் என்பவற்றிற்கு தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தடை விதிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.