வவுனியாவில் தங்க நகைகள் கொள்ளை!


வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள இளமருதங்குளம் பகுதியில் நேற்று நண்பகல் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இளமருதங்குளம் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் .

வீட்டிலுள்ளவர்கள் கிராம அலுவலகத்திற்குச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .

வீட்டின் உரிமையாளரின் மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருணத்திற்காகச் சேர்த்து வைக்கப்பட்ட தாலிக்கொடி, மோதிரம் , காப்பு என்பனவும் சிறிய தொகைப் பணம் போன்றவற்றை வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் கொள்ளயிட்டு சென்றுள்ளனர் .

கிராம அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது வீட்டின் பின் கதவு திறக்கப்பட்டிருந்ததுடன், அங்கிருந்து திருடன் ஒருவர் தப்பி ஓடுவதையும் அவதானித்தவர்கள் அயலவர்களின் உதவியை நாடியுள்ளனர் .

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து கைரேகை நிபுணர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் இவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை