வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வு வவுனியா மணிக்கூட்டுக் கோபுரச்சந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் நேற்றுக் காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், தந்தை செல்வாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன்பின்னர், நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.