வாழைச்சேனையில் அபிநய நடன கலைமன்றத்தினால் நடைவுபெற்ற கலை விழா




தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு வாழைச்சேனை அபிநய நடன கலைமன்றத்தினால் கலைவிழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வு பேத்தாழை குகனேசன் கலாச்சார மண்டபத்தில் அபிநய நடன கலைமன்ற நடன ஆசிரியர் திருமதி கிருஷாந்த் விமலாதேவியின் தலைமயில் நடைபெற்றது.

மேற்படி விழாவில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித்,மாவட்ட அபிவிருத்தி குழுவின் செயலாளர் சட்டத்தரணி திருமதி மங்களேஸ்வரி சங்கர்,கலாச்சார உத்தியோகஸ்தர் எஸ்.சிவகுமார் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பரதநாட்டிய நடனங்களான சிவதாண்டவம்,மயில் நடனம்,சர்ப்ப நடனம்,பொம்ம பொம்மதா நடனம்,ராதா கிருஷ்ணா நடனம் மற்றும் சிங்கள நடனம் என்பன அபிநய நடன கலை மன்ற மாணவிகளினால் அரங்கேற்றப்பட்டது.

மாணவிகளுக்கான பரிசில்கள் வழங்கியதுடன், மற்றும் நடன ஆசிரியர் பெற்றோர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.



புதியது பழையவை