கொவிட்-19 தொற்று நோய்க்கு தடுப்பூசிகள்தான் தீர்வு என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவான தடுப்பூசி இயக்கத்திற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்று கூறிய ஜனாதிபதி, முடக்கல் நிலையை விதிப்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறினார்.