மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்தள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உன்னிச்சை 3 ம் கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை நிதன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வேகமாக பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்திற்கு இலக்காக போவதை அவதானித்த மோட்டார்சைக்கிளின் பின்னாள் அமர்ந்து சென்ற நபர் மோட்டார்சைக்கிளில் இருந்து பாய்ந்துள்ளார்.
இதன்போது அவர் உழவு இயந்திரத்தில் சிக்கிப் படுகாயமடைந்ததுள்ள நிலையில் சுமார் அரை மணித்தியாலத்திற்கு பின் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது