யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய (24)தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொசன் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைதிகளில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் மற்றும், 77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையிலேயே யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.