நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கபட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இதற்கமைய, கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, அஹலவத்த மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மேலும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவை அண்மித்துள்ள பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொடை, கலவான மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவிற்கும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவிற்கும், நுவரெலிய மாவட்டத்தின் வலப்பன பிரதேச செயலக பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலப்பாத்த, இரத்தினபுரி, கிரியெல்ல மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண்மேடு சரிதல், மரங்கள் முறிந்து விழுதல், நிலம் தாழ் இறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்ப்படுமாறு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.