ஜூன் 8 தொடக்கம் 12 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.



12 மாவட்டங்களில் சினோபாம் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை, ஹம்பாந்தோட்டை,
பதுளை, மட்டக்களப்பு,
அனுராதபுரம், கேகாலை, புத்தளம், மொனராகலை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது, கர்ப்பிணி பெண்கள் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை