கடலட்டை பண்ணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் -சிறிதரன் விஜயம்



கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையில் சீனர்களின் பங்களிப்புடன் பராமரிக்கப்பட்டு வரும் கடலட்டைப் பண்ணையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று ஆராய்ந்தார்.

இதன்போது, நாட்டில் சீனா கால்பதித்துள்ள இடங்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களாகவுள்ளதாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இயற்கைக்கு மாறாக வளர்ப்புக் கோழிகளின் தீவனம் இடப்பட்டு, கடலட்டைகள் வளர்க்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.


புதியது பழையவை