கூட்டமைப்பு எம்பிகள் மீது சபாநாயகரே நடவடிக்கை எடுக்க வேண்டும்


நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைவுகூர்ந்திருந்தால் அது தொடர்பில் சபாநாயகரே நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பு கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று(29) பகல் நடந்தது.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அரசாங்கப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சாதாரணமாக மக்கள் வெளியிடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும்போது கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அவ்வாறு நினைவுகூர்பவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என வினவப்பட்டபோது அமைச்சர் அதற்கு மழுப்பல் பதிலையே அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புதியது பழையவை