அரசுக்கு எதிராக போராட்டம் நடாத்த வருமாறு அழைப்பு



இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்த அனைவரும் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காவும் போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பெற்றோல் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
புதியது பழையவை