மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தின் ஆயிலடிச்சேனை ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரவெளி கிராமசேவகர் பிரிவின் ஆயிலடிச்சேனை கிராமத்தை சேர்ந்த நாகராசா கரிசனன் வயது 14 என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 2.30 மணியளவில் நண்பருடன் தோணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தோணி காற்றின் வேகம் காரணமாக ஆற்றின் நடுப்பகுதியினை சென்றடைய முற்பட்டுள்ளது. இதனால் கரையில் நின்ற நண்பனின் உதவியினை நாடி காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளார்.
கரையில் நின்ற நண்பனோ தோணியின் கயிற்றினை பிடித்து இழத்து கட்ட முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என சம்பவத்துடன் தொடர்புபட்ட அவரது நண்பன் ஜெ.சிந்துஜன் தெரிவித்துள்ளார்.
இறுதியில் அயலவர்களின் உதவியினை நாடியுள்ளனர். அதற்குள் பயத்தின் காரணமாக தோணியில் இருந்த சிறுவன் ஆற்றில் பாய்துள்ளார். பாய்ந்தவரை காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
இறுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சடலத்தினை மீட்டுள்ளனர். சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.