யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சாலைக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பலே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது.