வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம், வவுனியா பல்கலைக்கழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பல்கலைகழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நேற்றையதினம் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
முன்னதாக சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் மதகுருமார்களிடம் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு பல்கலைகழக உத்தியோகத்தர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.