புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சார்ஜன்ட் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்ற்னர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய வாயிலில் உள்ள காவலரணில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கியை எடுத்து தனக்குத்தானே தலையில் சுட்டுக்கொண்ட குறித்த சார்ஜன்ட், ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.