இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஊடக மையம், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில், இன்று(29) முற்பகல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் அமைந்துள்ள, பழைய சார்டட் வங்கிக் கட்டிடத்தின் கீழ் மாடியில், இந்த ஊடக மையம் அமையப் பெற்றுள்ளது.
‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக, மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நனவாக்கும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படும், வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் ஜனாதிபதியினதும் ஜனாதிபதி அலுவலகத்தினதும் தகவல்களை, சரியாகவும் வினைத்திறனாகவும் ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்குவதே, இந்த ஜனாதிபதி ஊடக மையத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.
வாராந்தம் நடத்தப்படும் ஊடகச் சந்திப்புகளின் போது, தெரிவு செய்யப்பட்ட தலைப்பின் கீழ், ஜனாதிபதியின் பேச்சாளரிடமோ, அரச அதிகாரிகளிடமோ, நேரடியாகவோ அல்லது இணைய வழி ஊடாகவோ கேள்விகளை எழுப்புவதற்கு, ஊடகவியலாளர்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது.


