பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன புதிய பதவிக்கான கடமைகளைப் பொறுப்பேற்றார்


பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹன, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று 08-07-2021 ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பத்தரமுல்லையிலுள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொதுசுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இந்நிகழ்வு இடம் பெற்றது.
புதியது பழையவை