மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 250 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்டத்தில் இதுரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், செங்கலடி, ஏறாவூர், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 3 பேருமென 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை களுவாஞ்சிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 53 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 52 பேருக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேருக்கும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேருக்கும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேருக்குமென 250 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே நாளாந்தம் கோவிட் தொற்றாளர் வீதம் அதிகரித்து செல்வதுடன் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.