இலங்கையில் நேற்று 10-08-2021 ஆம் திகதி கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் 124 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5, 464 ஆக பதிவாகி உள்ளது.
இலங்கையில் இதுவரை பலியானவர்களில் நேற்றைய தினமே அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் திணைக்களம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.