இலங்கையில் 209 வைத்தியர்கள் கொரோனா தொற்றினால் பாதிப்பு


நாடளாவிய ரீதியில் 209 வைத்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான வைத்தியர்களில் 30-40 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஒரு வைத்தியர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இதுருவ பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று கேகாலையில் பொதுசுகாதார பரிசோதகர் ஒருவரும் ராகம வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுவது அதிகரித்து வருவதாகவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை