விதுஷனின் உடலம் கொழும்புக்கு மாற்றம்

மட்டக்களப்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் இரவு 10.45 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது அசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதி பதி ஏ,சி ரிஷ்வான் முன்னிலையில் வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

 இதன்போது புதைக்கப்பட்ட விதுஷசனின் உடலை மீண்டும் 21ம் திகதி திங்கள் கிழமை தோண்டி எடுத்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிண பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .

அந்த வகையில் தோண்டி எடுக்க பட்ட விதுஷனின் உடலம் அனுராத புரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் இன்றய தினம் உடல் கூற்று பரிசோதனைக்காக கொழும்புக்கு மாற்றபட்டுள்ளதாக விதுக்ஷனின் தகப்பனார் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை