நேற்றைய தினம் 74 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் மேலும் 74 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (02) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,645 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 315,175 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை