9,000ஐ கடந்தது கொரோனா உயிரிழப்புக்கள்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9000தை கடந்துள்ளது.

இதன்படி, நாட்டில் நேற்றைய தினம் (30) கொரோனா தொற்றினால் 194 பேர் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 438,421 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை