இலங்கையின் தற்போதைய கொரோனா நிலைமையில் ஒரு மணித்தியாலத்துக்கு 9 பேர் தொற்றால் உயிரிழந்து வருகின்றனர் என்று விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனாத் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் இதுவரையில் பதிவான கொரோனா சாவுகளில் அதிகளவானவை 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.