மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பகுதியில் இன்று(23) கைத்துப்பாக்கி மற்றும் மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
காங்கேயனோடையில் உள்ள வெற்றுக்காணியொன்றில் கைவிடப்பட்ட நிலையிலிருந்தே இந்த கைத்தூப்பிக மற்றும் மகசின்களை அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த காணிக்குள் குறித்த துப்பாக்கியை வீசிவிட்டுச்சென்றுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிமற்றும் மகசின்களை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.