சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டாரவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
ஊடக சந்திப்பொன்றின்போது உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தினார் எனக் குறிப்பிட்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (31)காலை 8 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.