மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் வாகன விபத்து

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இன்று(19) இடம்பெற்ற வாகன விபத்தில் எவருக்கும் எதுவித காயங்கள் ஏற்படவில்லை எனவும் அதேவேளை வாகனம் பலத்த சேதங்களுக்குளுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் பகுதியை நோக்கி பயணித்த வேனுடன் ,வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியதால் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள கோயிலுக்கு முன்னாள் பிரதான வீதிக்கு குறுக்கே மாடு ஒன்று சென்றதன் காரணமாக வாகனத்தை நிறுத்த சாரதி முட்பட்ட வேளையில் எதிரே வந்த பேருந்துடன் வேண் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை