கொரோனா தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இரண்டையும் ஏற்றிக் கொண்டவர்களின் உடம்பில் கொரோனா வைரஸ் பரவும் தன்மை 65 வீதம் குறைவாக காணப்படும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் சார்ந்த ஆய்வு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவாந்தர மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

88 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், அவற்றில் 84 டெல்டா வகை தொடர்புடைய மரபணு பகுப்பாய்வாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறினார்.
புதியது பழையவை