நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (25) காலை மட்டக்களப்பு முகத்துவாரம் மீன் சந்தையில் மக்களின் கவனயீனமான நடவடிக்கையைக் காணமுடிந்துள்ளது.
கோவிட் காலப்பகுதியில் அதுவும் பொது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் மக்களின் இவ்வாறான அசமந்தபோக்கினால் மீண்டும் கோவிட் கொத்தணிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.