கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவு கிராமிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றும் ஓர் மோட்டார் சைக்கிகளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.