இன்று முதல் இலங்கையில் உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி இன்று கல்முனை, சூரன்பற்று, கரண்டை, உடையார் துறை, சங்குபிட்டி, பளை போன்ற முக்கிய பிரதேசங்களை இணைக்கும் அகல கோட்டின் வழியே பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என கூறப்படுகின்றது.

அத்துடன் இக் காலப்பகுதியில் நாட்டின் வெப்பநிலையிலும் உயர்வு காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  
புதியது பழையவை